சென்னை, நவ. 27 - அதானி விவகாரத்தில் முறைகேடு நடக்கவில்லை யென்றால் நாடா ளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு ஆட்சியாளர்கள் மறுப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பி னார். சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் முறைகேடு செய்துள்ள அதானி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்,
லஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ள அவரை கைது செய்ய வேண்டும், சிபிஐ விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி புதனன்று (நவ.27) சென்னை எம்ஜிஆர் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது: கவுதம் அதானியையும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்களையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.
சத்தீஸ்கர், ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநில அரசுகள் சூரிய ஒளி மின்சாரத்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ள அதானி லஞ்சம் கொடுத்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. கவுதம் அதானியின் பங்குச்சந்தை மோசடி குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் அறிக்கை கொடுத்தது.
அதன்மீது மோடி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், அமெரிக்க பங்குச்சந்தையில் அதானி மூலதனம் திரட்டி, அதிலிருந்து சூரிய ஒளி மின்சாரத்தை வாங்க வைக்க 4 மாநில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளார். எந்தெந்த மாநில அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அதானியின் லேப்டாப்பில் இருந்து ஆதாரங்களை கைப்பற்றி வழக்கு தொடுத்துள்ளனர். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கோரியது. நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சிகளும் கூட்டுக்குழு விசாரணையை கோரு கின்றன.
இந்திய நிறுவனம் ஒன்று ஊழல் செய்த நிலையில், அமெரிக்க நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மோடி அரசு மறுக்கிறது. நாடாளுமன்றத்தில் அதானி என்ற பெயரையே உச்சரிக்க கூடாது. கூட்டு விசாரணைக்குழு நடத்தக் கூடாது என்கிறது மோடி அரசு. மோடி அரசும், பாஜகவும் அதானியின் பினாமியாக செயல்படுகின்றன. அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த உடன், அந்நிறுவனத்தில் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இதனால் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுத்துறைகளில் முதலீடு செய்துள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ள னர். அதானியை லஞ்சம் ஊழல் முறை கேட்டில் அமெரிக்க அரசு கைது செய்யும் முன்பு இந்திய அரசு கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கட்சியின் விருகம்பாக்கம் பகுதிக் குழுச் செயலாளர் ஏ.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கன், செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, இ.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.