tamilnadu

ஒன்றிய அரசின் கடன் சுமை ரூ.100 லட்சம் கோடியை மறந்தது ஏன்?

சென்னை,ஜன.6- ஒன்றிய பாஜக அரசின் கடன் சுமை ரூ.100 லட்சம் கோடியை அண்ணாமலை மறந்தது ஏன் என்று  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  கேள்வி எழுப்பி யுள்ளார். இது குறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

இந்தியாவில் எத்தகைய உத்தியை கையாண்டாலும் பாஜக வின் வாக்கு வங்கியை விரிவுபடுத்த முடியாத ஒரே மாநிலமாக மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள்  எஃகு கோட்டையாக தமிழ்நாடு விளங்குகிறது.

இந்நிலையில் நடைபயணம் என்ற போர்வையில் உல்லாச பயணம் மேற்கொண்டு வரும் பாஜக தலைவர் அண்ணா மலை வெந்த புண்ணில் வேல்  பாய்ச்சு கிற வகையில் உண்மைக் குப் புறம்பான ஆதாரமற்ற அவதூ றான கருத்துக்களை கூறி வருகிறார்.  தமிழ்நாட்டின் நிதிநிலை அதல பாதாளத்திற்கு சென்று விட்ட தாகவும் தமிழகத்தின் ஒட்டு மொத்த கடன் தொகை அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி யாக உயர்ந்து விடும் என்றும் பேசியிருக்கிறார். தன் முதுகு தனக்கு தெரியாது என்பதால் இத்த கைய கருத்தை அவர் கூறியிருக் கிறார்.  இக்கருத்தை கூறுவதற்கு முன் ஒன்றிய பாஜக அரசின் கடன் நிலைமை என்ன என்பது குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் கடனைப் பற்றி பேசுகிற அண்ணாமலை ஒன்றிய பாஜக அரசின் 9 ஆண்டுகால கடன்  சுமை ரூ.100 லட்சம் கோடி அதிகரித் திருப்பதை பற்றி என்ன பதில் கூறப் போகிறார்? இதற்கான விளக்கத்தை தருவாரா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.