கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தவில், நாதஸ்வர கலை ஞர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் உள்ளனர். குடும்ப விழாக்கள், திறப்பு விழாக்கள், திருமணங்கள், கோவில் விழாக்கள் என வருடத்தில் நான்கு மாதங்கள் நடக்கும். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே மீதம் 8 மாதங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டும். தற்போது ஊரடங்கு பிறப்பிக் கப்பட்டு 50 நாட்களாக விழா, முகூர்த்தம், கோவில் விசேசங்களும் இல்லாத நிலை உள்ளது. இதனால் வருமானமின்றி உணவு, வீட்டு வாடகை, மருத்துவ செலவுகள், கல்விக் கட்டணங்கள் என கடும் நெருக் கடியை அந்த கலைஞர்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்த இசை கலைஞர்களுக்கு தமி ழக அரசு நிவாரணம் ஏதும் அளிக்கா மல் உள்ளது. இவர்களில் 25 விழுக் காட்டினர் 60 வயதை கடந்தவர்கள். ஆனால் ஒருவருக்கு கூட ஓய்வூதிய உதவித் தொகை வழங்கப்படவில்லை. 95 விழுக்காடு கலைஞர்கள் வாரிய உறுப்பினராக பதியப்படவில்லை. முறைசாரா தொழிலாளர் வாரியத்தி லிருந்து சிறு பலன்கூட இந்த கலை ஞர்கள் பெறுவதில்லை. இதுகுறித்து நாதஸ்வரம், தவில் இசை பயிற்சி பள்ளி தலைவர் பிரகாஷ், பொது செயலாளர் பட்டாபி ராமன், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கடந்த 13 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். அதில், விசேச காரியங்கள், கோவில் பூiஜைகள், திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் சமூக இடை வெளியுடன் நடத்த அனுமதிக்க வேண்டும், 60 வயதான கலைஞர்க ளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், வாரிய உறுப்பினராக்கி அதன் பலன்கள் வழங்க வேண்டும். ஊரடங்கு கால நிவாரணமாக குறைந்த பட்சம் 7 ஆயிரம் ரூபாய் வீதம் 3 மாதங்க ளுக்கு வழங்க வேண்டும், அரசு மூலம் நிவாரண பொருள்கள் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முடி திருத்துவோர்கள் சங்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் சிகை அலங்காரம் செய்யும் தொழிலாளர்களாக உள்ள னர். இவர்களில் ஒருவர் கூட நல வாரிய உறுப்பினராக சேர்க்கப்பட வில்லை. மாநில அளவில் சுமார் 15 ஆயிரம் பேர் மட்டுமே வாரிய உறுப்பி னர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். நலவாரியம் வாயிலாக வழங்கப்ப டும் நிவாரணம் 2ஆயிரம் ரூபாயை 25 விழுக்காட்டினருக்கே கிடைத் துள்ளது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரி டம் சிகை அலங்கார தொழிலாளர்கள் நேரில் மனு அளித்தும் கோரிக்கை கள் பரிசீலிக்கப்படாமல் உள்ளது. எனவே நாவிதர் நல சங்க தலைவர் ஆனந்தன், செயலாளர் கோவிந்த ராஜ், பொருளாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் ஓசூரில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், சிகை அலங்கார தொழிலில் உள்ள அனைவரையும் உறுப்பின ராக்க வேண்டும், அனைத்து தொழி லாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் தர வேண்டும். மேலும, 3 மாதத்திற்கு தலா 8 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட தவில் நாதஸ்வ ரம் இசைகலைஞர்களும், முடி திருத்தும் தொழிலாளர்களும் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் கோரிக்கை மனுவை மட்டும் அளித்தனர்.