tamilnadu

கட்சிகளுக்கு எந்த வகையில் அழைப்பு?

சென்னை, ஜூலை 9- துரைமுருகன்: அங்கீக ரிக்கப்பட்ட கட்சி என எந்த வகை யில் பல கட்சிகள் அழைக்கப் பட்டன.
முதலமைச்சர்: முதலில் அங்கீ கரிப்பட்ட கட்சிகளைத்தான் அழைப்பது என்று முடிவு செய்  தோம். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியதன் பேரிலேயே  அனைத்து கட்சிகளையும் அழைத்  தோம். இல்லையென்றால்  அழைத்திருக்கமாட்டோம்.
ஓ. பன்னீர்செல்வம்: எதிர்க் கட்சித் தலைவர் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களைதான் அழைத்தோம்.  முதல்வர் பங்கேற்காதது ஏன்?
ஸ்டாலின்: நான் எந்த பட்டியலையும் தரவில்லை. ஜெயலலிதா வுக்கு பட்டம் வழங்கிய தி.க தலைவர் வந்தால் சிறப்பாக இருக்கும் என்றுதான் சொன்னேன். மற்ற கட்சித் தலைவர்களை
யும் அழைத்துள்ளனர். அதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஐ.ஜே.கே, மனித நேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் அழைக்கப்படவில்லை. அரசுக்கு ஆதரவான ஜான்பாண்டியன் கட்சி, புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் மட்டும் அழைக்கப்பட்டது ஏன்? அந்த கூட்டத்தில் முதலமைச்சர் கலந்துகொள்ளாதது ஏன்?
துணை முதல்வர்: இனிமேல் அதுபோன்ற குறைபாடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்.
முதலமைச்சர்: அனைத்துக் கட்சி கூட்டம் துணை முதலமைச்சர்  தலைமையில்தான் நடைபெறும் என முன்கூட்டியே தெரிவித்துவிட்டோம். அந்த கூட் டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்திருந்தால் நாள் முழுவதும் விவாதம் நடைபெற்றிருக்கும். சில கட்சிகள் தாழ்த்தப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருப்பதால் அழைத்தோம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.