tamilnadu

img

எனக்கு ஏமாற்றம்தான் : ரஜினி பேட்டி

சென்னை:
சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த்  வியாழனன்று ஆலோசனை நடத்தினார்.

அரசியலுக்கு வருவது உறுதி என்று பல ஆண்டுகளுக்குப் பிறகு 2017 ஆம் ஆண்டில் ரஜினி அறிவித்தார். இதைத்தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றம், ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றப்பட்டு, மாவட்ட வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் மார்ச் 5 வியாழனன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்றது . தமிழகம் முழுவதும் 37 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்திற்குப் பின்னர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

ஒரு ஆண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர் களை சந்தித்தேன். கட்சி தொடங்குவது பற்றி மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். எனக்கு நிறைய கேள்விகள் இருந்தது. அதுகுறித்த பதில்களை கேட்டு தெரிந்து கொண்டேன்.  மாவட்ட நிர்வாகிகளுக்கு எல்லாம் திருப்தி. ஆனால் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி இல்லை. எனக்கு  ஏமாற்றம் தான்.  ஆனால் அது என்னவென்று நான் இப்போது சொல்ல விரும்ப வில்லை.பின்னர் கூறுகிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றம்.  இஸ்லாம் மத குருமார்களுடனான சந்திப்பு ரொம்ப இனிமையான சந்திப்பு. சகோதரத்துவம்,அன்பு,அமைதி, நாட்டு நிலவ வேண்டும் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறோம். நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்கள். நான் அதற்கு என்னால் முடிந்த அளவிற்கு உதவுவதாக கூறினேன்.மத குருமார்கள்  நன்கு ஆலோசனை செய்துவிட்டு பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தியுங்கள் என அவர்களிடம் கூறினேன் என்று தெரிவித்தார்.  பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த ரஜினி ரசிகர்கள் இந்த பேட்டியால் அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

;