“ரயிலில் என்னிடம் ஒரு பெண் கேட்டார் - ‘தமிழ்நாட்டுக்கு கம்யூனிஸ்ட்டுகள் செய்தது என்ன?’ என்று. ரயில் பயண நேரத்துக்குள் அதை விளக்கிவிட முடி யாது என்றேன் நான்.”
நெய்வேலியும் பெல் நிறுவனமும்
நெய்வேலி அனல் மின்நிலையத் திட்டத்தை கைவிட முயற்சிகள் நடந்த போது, நம் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அனந்தநம்பியாரும், பி.ராமமூர்த்தியும் கடும் முயற்சி எடுத்து அந்த மின்நிலை யத்தை கொண்டு வந்தார்கள். அதே போல பெல் நிறுவனம் தொடங்கப்பட்டதிலும் கம்யூனிஸ்ட் தலைவர்களின் பங்களிப்பை மறுக்க முடியாது.
தமிழ்நாடு பெயர் சூட்டல் போராட்டம்
X‘தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டுவதற்காக கம்யூனிஸ்ட் தலைவர்கள் பூபேஷ்குப்தா, பி.ராமமூர்த்தி ஆகியோரின் முயற்சிகளை மறைக்க முடியாது. அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணாவே, ‘எங்களின் கோரிக்கையை கம்யூனிஸ்டுகள் கடத்திக் கொண்டு சென்றுவிட்டனர்’ என்று பேசினார்.
சங்கரலிங்கனாரின் தியாகம்
தமிழ்நாடு என பெயர் சூட்டக் கோரி விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அப்போது, கம்யூனிஸ்ட் தலை வர்கள் பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், என்.சங்கரய்யா நேரில் சென்று ஆதரவு தெரிவித்து, உண்ணாவிரதத்தை கைவிடக் கேட்டுக் கொண்டனர். உடல் நலிவடைந்த சங்கரலிங்கனார் காலமானார். ஆனால் அவர் இறப்புக்கு முன் எழுதிய உயிலில் ஒரு வாசகம் இருந்தது - ‘எனது மர ணத்துக்குப் பிறகு உடலை கம்யூனிஸ்ட்டு களிடம்தான் ஒப்படைக்க வேண்டும்.’
பாஜகவின் கார்ப்பரேட் ஆதரவு
இன்றைக்கு இந்த நாட்டை ஆளும் பாஜக அரசு, அதானிக்கும் அம்பானிக்கும் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.14 லட்சம் கோடி வரை வரிச்சலுகை கொடுத்துள்ளார்கள். ஆனால் ஏழை விவசாயத் தொழிலாளர்கள் பயனடையும் நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு நிதி ஒதுக்க தயங்குகிறார்கள். ஏற்கனவே கொடுத்த நிதியையும் குறைத் திருக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்கு ஆத ரவான அரசாகத்தான் பாஜக அரசு செயல்படுகிறது.
விலைவாசி உயர்வும் எரிபொருள் விலையும்
கடுமையான விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மறுக்கிறார்கள். கடந்த 6-7 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட் கள், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் உற்பத்தி விலை ரூ.42. டீலர்களின் கமிஷ னையும் சேர்த்தால் அதன் விலை ரூ.46. ஆனால் விற்பனை விலை ரூ.101! அளவுக்கு அதிகமான வரிகளை போட்டு மக்களை வாட்டி வதைக்கின்றனர்.
சாசனத்தை காப்போம்
ராமர் கோவில் இடிக்கப்பட்ட காலத்தில், அந்த மாநிலத்தில் இருந்த பாஜக அரசின் அரசு வழக்குரைஞர், ‘எந்த தவறும் நடக் காது’ என நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் பாபர் மசூதி இடித்து தரைமட்ட மாக்கப்பட்டது. இந்திய அரசியல் சாச னத்தை சீர்குலைக்க, மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சிக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும்!
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் திங்கள்கிழமை மாலை தொடங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாவட்ட மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பேசியதில் இருந்து