tamilnadu

img

குஜராத் மாடலுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

குஜராத் மாநிலம் சூரத்தில் வெறும் 7 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படிப்பட்ட விபத்துக்களில் இருந்தே கட்டிடத்தின் தரம் குறைவாக இருப்பது நன்றாக தெரிகிறது. மேலும் அப்பகுதி மக்கள் இந்த கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் குஜராத் தான் என்று பொய்யுரைகளை பரப்பி, மக்களை திசைதிருப்பி அரசியல் செய்துவந்த பிரதமர் மோடியும், குஜராத் மாநில பாஜக முதல்வர் பூபேந்திரபாய் படேலும் தற்போது என்ன பதில் கூறப்போகிறார்கள்?” என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை விமர்சித்துள்ளார்.