சென்னை:
தமிழ்நாட்டில், பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு என, தனி அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி, அந்தந்த மாநில முதல்வர்களை, வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருப்பதாக கூறினார்.