சென்னை, செப். 14- சென்னையில் திரு மணத்திற்கு தேவையான பொருட்கள் குறித்த கண்காட்சி (தி பிரைடல் ஸ்டோரி) சனிக்கிழமை தொடங்கியது. ஞாயிறன்று வரை நடை பெறும் இந்த கண்காட்சி யில் திருமண பந்தல் அலங்காரம், வெள்ளி பொருட்கள், சமையல், அணிகலன்கள், அன்பளிப்பு பொருட்கள், திருமண அழைப்பிதழ், நவீன தொழில்நுட்பம் மூலமாக திருமண அழைப்பிதழை அனுப்புதல், திருமணத் திற்காக த னி செயலி, என திருமணம் தொடர்பான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் திட்டங்களை காட்சிப்படுத்தி யுள்ளன. இந்த கண்காட்சிக்கு ஜெயின் இன்டர்நேஷ்னல் வர்த்தக அமைப்பின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்தி ருந்தது. இந்த கண்காட்சியை திரைக்கலைஞர் காஜல் அகர்வால் திறந்துவைத்தார். இதில் சங்கத்தின் தலை வர் சோனாலி துகார், டாக்டர் பிரியா, ஷர்மிளா ஓஸ்வால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.