மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதி 91வது வட்ட கிளை உறுப்பினரும், சென்னை மற்றும் புறநகர் கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தின் (தென்சென்னை) மாவட்ட பொருளாளருமான பி.சுப்பிரமணி - எஸ்.உமா ஆகியோரது மகன் சு.மேகநாதன்-மு.யோகேஸ்வரி ஆகியோரது திருமண வரவேற்பு ஆக.31 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் கட்டுமான தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.சிங்காரவேலு, சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், பகுதிச் செயலாளர் வி.தாமஸ், சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.