சென்னை, மார்ச் 25- மாநில உரிமைகளை பாதுகாக்க மத வாத பாஜகவை வீழ்த்துவோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். வட சென்னை மக்களவைத் தேர்த லில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி போட்டி யிடுகிறார். இதையொட்டி சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. தலைமையில் நடை பெற்றது.
இதில் அமைச்சர் சேகர்பாபு பேசு கையில், மதக் கலவரத்தை ஏற்படுத்தி, சாதி மோதலை உருவாக்கி அதன் மூலம் ஆட்சியை கைப்பற்றலாம் என பாஜக வினர் நினைக்கின்றனர். அது ஒரு போதும் தமிழ்நாட்டில் எடுபடாது என்பதை இந்த தேர்தலில் மீண்டும் நிரூபிக்கும் வகையில் 40 தொகுதி களில் வெற்றி பெறுவோம். மாநில உரிமைகள் அனைத்தையும் பாஜக அரசு பறிக்க நினைக்கிறது. சமூக நீதியை ஒழிக்க நினைக்கிறார்கள்.
மாநில உரிமைகளை, ஜனநாய கத்தை, அரசியல் அமைப்புச் சட்டத்தை, சமூக நீதியை நிலைநாட்ட பாஜகவை வீழ்த்தியாக வேண்டும். பாஜகவை, அதற்கு துணை போன கட்சி களை வீழ்த்துவது ஒன்றே குறிக்கோள் என்ற அடிப்படையில், கூட்டணிக் கட்சி களுடன் இணைந்து பணியாற்றி லட்சக்கணக்கான வாக்குகள் வித்தி யாசத்தில் கலாநிதி வீராசாமியை வெற்றி பெறச் செய்வோம் என்றார்.
இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தொகுதி பொறுப்பா ளர் நந்தனம் நம்பிராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் எல்.சுந்தரராஜன், சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் ஏ.நாராயணன், கங்கிரஸ் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், சிபிஐ மாவட்டச் செயலாளர் கு.வேம்புலி வெங்கடேசன், மதிமுக மாவட்டச் செய லாளர் சு.ஜீவன், விசிக மாவட்டச் செய லாளர் சி.சவுந்தர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் பி.சம்சுதின், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ராயபுரம் அலி, ஆம் ஆத்மி கட்சி மாவட்டச் செயலாளர் முகமது பாரூக் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேசினர். இதில் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபிநேசர், திமுக பகுதிச் செய லாளர்கள் இரா.லட்சுமணன், எஸ்.ஜெபதாஸ் பாண்டியன், தலைமை செய ற்குழு உறுப்பினர் இளைய அருணா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலா ளர் வெ.ரவிக்குமார், மாமன்ற உறுப்பி னர் பா.விமலா உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.