விலைவாசி உயர்வுக்கு காரணமான பாஜகவை வீழ்த்துவோம் திருவொற்றியூர் பொதுக்கூட்டத்தில் கே.பாலபாரதி சூளுரை
விலைவாசி உயர்வுக்கு காரண மான, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவு பாஜகவை வீழ்த்துவோம் என்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெறுவதை யொட்டி சிந்தனை சிற்பி தோழர் ம.சிங்காரவேலர் நினைவுச் சுடர் சென்னையில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. அதன் துவக்க பொதுக்கூட்டம் திருவொற்றியூர் பெரியார் நகரில் சனிக்கிழமை (மார்ச் 29) நடைபெற்றது. தெற்கு பகுதிச் செயலாளர் ஆர்.கருணா நிதி தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.செல்வகுமாரி வரவேற்றார். இதில் கலந்து கொண்டு பயணக் குழு தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான கே.பால பாரதி பேசியதாவது:- துவக்கத்தில் இருக்கக்கூடிய அரசியல் அமைப்புகள் உருவாக தொடங்கிய ஒரு காலகட்டம். தலித் அமைப்புகள், காந்திய அமைப்புகள், தத்துவங்கள் என எல்லாமே 1920ஆம் ஆண்டுகளில் தான் தோன்றின. அவ்வாறு தோன்ற ஆரம்பித்த அந்த அரசியல் அமைப்புகளில் மிக கொடூரமான தண்டனை களுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு அமைப்பு எது என்றால்அது கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான். இத்தகைய கம்யூனிஸ்ட் கட்சி யில் தான் தோழர் சிங்காரவேலர் இணைத்துக் கொள்கிறார். 1920 களில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் நான் ஒரு கம்யூனிஸ்ட், உலக கம்யூனிஸ்ட் என்று அவர் தெரிவிக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநாட்டிற்கு தலைமை தாங்கி விவசாயிகள், தொழிலாளர் ஒற்று மையை அவர் வலியுறுத்தினார். அதே காலகட்டத்தில் தான் கான்பூர் சதி வழக்கில் சிங்காரவேலர் கைது செய்யப்படுகிறார். 1932களில் கம்யூ னிஸ்ட் கட்சி பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்படுகிறது. சிங்காரவேலர் வீரம், தியாகம், மார்க்சிய சிந்த னையை உயர்த்திப் பிடிப்போம். அவரின் சோசலிச லட்சியத்தை உறுதியாக அடைந்தே தீருவோம் என்றார். திசைத் திருப்பும் பாஜக கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து அத்தியாவசிய பொருட்க ளின் விலையும் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. தினசரி விலைகள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு காரணம் ஒன்றிய பாஜக அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பும், சுங்க ச்சாவடி கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்வும் தான், தமிழ்நாட்டில் பொது விநியோக முறைக்கு 38 லட்சம் மெட்ரிக் டன்அரிசி தேவை. ஆனால் பாஜக அரசு ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரிசி தான் கொடுக்கிறது. அதேபோல் மண்ணெ ண்ணெய், பாமாயில் உள்ளிட்ட பொருட்களை முழுமையாக வழங்க வில்லை. தற்போது பொது விநி யோக முறையை தனியார் வசம் ஒப்படைக்க பாஜக அரசு முயற்சி மேற்கொள்கிறது. இவற்றை யெல்லாம் திசை திருப்ப நாடு முழு வதும் மதக்கலவரங்களை உரு வாக்கி மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாஜகவை ஆட்சியில் இருந்து வீழ்த்துவது தான் செங்கொடியின் ஒரே லட்சியம் என தோழர் சிங்கார வேலர் நினைவுச் சுடர் பயணத்தில் உறுதியேற்போம். இவ்வாறு பாலபாரதி பேசினார். இந்தக் கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.வாலண்டினா, எல்.சுந்தரராஜன், வட சென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராம கிருஷ்ணன், சிஐடியு மாவட்டச் செய லாளர் ஆர்.ஜெயராமன், சிபிஎம் வடக்கு பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல் ஆகியோரும் பேசினர். வரவேற்புக் குழு தலைவர் எஸ்.கே. மகேந்திரன், செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.பாக்கியலட்சுமி, எஸ். ராணி, எல்.பி.சரவணத் தமிழன், வி.ஜானகிராமன், ஆர்.லோகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.பாபு, எஸ்.பவானி, வெ.ரவிக் குமார், மாமன்ற உறுப்பினர் பா. விமலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி சென்னை ராயபுரத்தில் இருந்து தொடங்கிய தோழர் சிங்காரவேலர் நினைவுச் சுடர் பயணக்குழுவிற்கு முன் 24 இருசக்கர வாகனத்தில் அணிவகுத்த செந்தொண்டர்கள்.