“சிபிஐ என்றால் என்னவென்று எங்களுக்கு தெரியும். ரூ. 570 கோடி பிடிபட்ட வழக்கே 8 வருடமாக நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படி பல வழக்குகள் சிபிஐ-யில் நிலுவையில் உள்ளன. எனவே நாங்கள் சிபிஐ விசாரணை கேட்க மாட்டோம். ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் நடந்தது போல், எடப்பாடி பழனிசாமிக்கு நெடுஞ்சாலைத் துறை டெண்டர் வழக்கில் நடக்கும். மீண்டும் அந்த வழக்கை நான் நடத்த உள்ளேன்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.