தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய அரசை வலியுறுத் தும் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியது வருமாறு:
இட ஒதுக்கீடு ஏன்?
“சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுவ தில் சம வாய்ப்புகளையும், சம உரி மைகளையும் கொண்டவர்களாக மாற்றுவதன் மூலம் தான் உண்மை யான பொருளாதார வளர்ச்சி அடைந்த சமுதாயமாக நாம் மாற இயலும். அந்த நோக்கத்தோடு தான் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய தளங்களிலும் அனைத்து தரப்பு மக்களிடையே ஒரு சம நிலையை கொண்டு வருவதற்காக இடஒதுக்கீடு கொள்கை நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர், சிறுபான்மை யினர் மற்றும் மாற்றுத் திறனாளி கள் என சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் ஒருங்கே வளர்ச்சி யடைய வழிவகை செய்து அத னைக் கடைப்பிடித்து வருகிறோம்.
சமீபகாலமாக சாதி வாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஒன்றிய அரசின் பணி
ஆனால், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அர சின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948-இன் கீழ் மேற்கொள்ளப் படும் மிகப்பெரிய பணி. ஆங்கி லேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றிய அரசால் நடத்தப்பட்டு வரும் பணி. மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்கள் அனைத்தும் இக் கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப் பட்டு ஒன்றிய அரசால் தொகுத்து வெளியிடப்படுகிறது.
மக்கள் தொகைக் கணக்கெ டுப்பு சட்டப்பிரிவு 3-இன் படி ஒன்றிய அரசு தான் மக்கள் தொகை கணக் கெடுப்பை நடத்த வேண்டும். ஆனால் புள்ளிவிவரச் சட்டம் 2008- இன் அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம் என்று பொது வெளியில் பரவலாக சொல்லப்படு கிறது.
மாநிலங்களுக்கு அதிகாரமில்லைc
மேலும், இந்தச் சட்டத்தின்படி மாநில அரசுகள் சமூகப் பொருளா தார புள்ளி விவரங்களை சேகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதை தவிர, இதே சட்டத்தின் பிரிவு 3 (அ)- இன் படி இந்த அரசியலமைப்பு சட்டத்தின் 7-ஆவது அட்டவணை யில் உள்ள இனங்கள் தொடர்பாக புள்ளி விவரங்கள் சேகரிக்க இய லாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது 7-ஆவது அட்ட வணையில்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு 69வது இனமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டு மல்ல, இந்த சட்டப்பிரிவு 32-இன் படி மக்கள் தொகை கணக்கெ டுப்பு சட்டம் 1948-இன் கீழ் கணக்கெ டுக்கப்படும் மக்கள் தொகை தொடர்பான விவரங்களை சேக ரிக்க இயலாது என்பது தெளி வாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத் தில் நிலுவையில் உள்ளது.
காலம் தாழ்த்தும் ஒன்றிய அரசு
இந்நிலையில் பொதுவெளி யில் தவறாக சொல்லப்படும், புள்ளி விவரச் சட்டம் 2008-இன் கீழ் மாநில அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த இயலாது. சட்டப்படி நிலைக்கக் கூடிய கணக் கெடுப்பு என்றால் ஒன்றிய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் தான் மேற்கொள்ள வேண்டும். எனவே தான் இப்பணி யை ஒன்றிய அரசு மேற்கொள்வது தான் முறையாக இருக்கும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 246-இன் படி மக்கள் தொகை கணக் கெடுப்பு ஒன்றிய அரசின் பட்டிய லில் வைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டு களுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டிய அடிப்படைப் பணியான மக்கள் தொகை கணக்கெடுப் பினை 2021ம் ஆண்டு மேற்கொள் ளாமல் ஒன்றிய அரசு இன்று காலம் தாழ்த்தி வருகிறது. முதல் ஆண்டு கோவிட் தொற்றை காரணமாக சொன்னார்கள். கோவிட் தொற்று முடிந்து 3 ஆண்டுகள் கடந்தும் அப் பணியை மேற்கொள்ளாமல் இருப் பது ஒன்றிய அரசு அதன் கடமை யைப் புறக்கணிக்கும் செயல்.
கடந்தாண்டே கடிதம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு டன் சாதிவாரி கணக்கெடுப்பையும் உடனடியாக நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடந்த ஆண்டே கடிதம் எழுதியுள்ளேன். ஒன்றிய அரசு இந்தப் பணியை மேற்கொள் ளம் போது கிடைக்கும் புள்ளி விவ ரங்கள் அடிப்படையில் மாநில அரசு எடுக்கும் முடிவுகள், இயற்றும் சட் டங்களுக்கு சட்டப் பாதுகாப்பு இருக்கும். மாறாக அந்தந்த மாநில அரசுகள் ஒரு சர்வே என்ற பெயரில் புள்ளி விவரங்களை சேகரித்து அதனை சட்டமாக மாற்றினால் நீதி மன்றங்களில் ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு முதலமைச்சர் தெரி வித்தார்.