tamilnadu

img

மிளிரும் இளந்தலைவர்களை வளர்த்தெடுத்து வருகிறோம்! முதலமைச்சர் பெருமிதம்

சென்னை, நவ. 6 - “உலக அரங்கில் மிளிரும் இளந் தலைவர்களை நான் முதல்வன் திட்டம் வாயிலாக நாம் வளர்த்தெடுத்து வரு கிறோம்” என நான் முதல்வன் திட்டத்தின் செயல்பாடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ்  பயிற்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்ற நேர்காணல் தொடர்பாக, நேர்காணல் நடத்திய ஹரதன் பால் என்ற யூடியூபர் தனது சமூக வலைதள பக்கத்தில் பாராட்டு தெரிவித் திருந்தார். இதற்கு ஐபிஎம் நிறு வனத்தைச் சேர்ந்த தேவ்  காந்த் அகர் வால் நன்றி தெரிவித்தி ருந்தார். இவ்விரு பதிவுகளையும் சுட்டிக்காட்டி முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலை தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளி யிட்டுள்ளார். 

அதில், “தமிழகத்தின் முதல்வராக வும் ஒரு பெருமைமிகு பெற்றோராக வும் நமது இளைஞர்களின் அறி வுத்திறன் அங்கீகாரம் பெறுவது கண்டு எனது நெஞ்சம் பெருமித உணர் வால் நிறைகிறது. என் நெஞ்சுக்கு நெருக்கமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வாயிலாக உலக அரங்கில் மிளிரும் இளந்தலைவர்களை நாம் வளர்த்தெடுத்து வருகிறோம். நமது இளைஞர்கள் நிமிர்ந்து நின்று, உல கை வெற்றிகொள்ளவும் முன்னட த்திச் செல்லவும் தயார் என்று பறை சாற்றுகிறார்கள்” எனத் தெரிவித்துள் ளார்.