மெழுகு பூசிய ஆப்பிள், ரசாயனம் செலுத்திய
தா்பூசணி பழங்கள் பறிமுதல்
ஒசூரில் செயற்கை மெழுகு பூசிய ஆப்பிள், ரசாயனம் செலுத்திய தர்பூசணி பழங்கள் விற்பனையால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் சமீப காலமாக செயற்கை மெழுகு தடவிய ஆப்பிள் உள்ளிட்ட பழங்களும் ரசாய னம் செலுத்திய தர்பூசணி பழங்களும் விற்கப்பட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது. வெயில் காலம் துவங்கிய நிலையில் அதிகமானவர்கள் பழங்கள் வாங்கிச் செல்வார்கள் என்பதால் பெங்களூரில் இருந்து அதிகமான அளவு இறக்குமதி செய்யப்படுகின்ற ஆப்பிள் பழங்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமலும்,தோற்றம் மாறாமலும்,மினுமினுப்பாக இருப்பதற்காக வும், தர்பூசணி அறுக்கும் போது மிகவும் சிவப்பாக தெரிவதற்காக ஊசி மூலம் பழங்களில் ரசாயனம் செலுத்தப்படு வதாகவும் தெரிய வருகிறது. உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர் முத்து மாரியப்பன்,அதிகாரிகள் 22 கடைகளில்,மொத்த விற்பனை நிலையங்க ளில், வாகனங்கள் மூலம் விற்கப்படும் இடங்களில் சோதனைகள் நடத்தினர். அதில் 11 கடைகளில், தர்பூசணி யில் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தி யுள்ளதும்,ஆப்பிள் பழங்களில் மெழுகு தடவப்பட்டிருப்பதும்,கெட்டுப் போன பல பழங்கள் மெழுகு தடவப்பட்டிருப்பதால் பார்ப்பதற்கு நல்ல பழங்கள் போல இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பல கடைக்காரர்களுக்கு மெழுகு ரசாயனம் பழங்களின் மீது உப யோகிக்கப்பட்டு இருப்பது தெரியாத நிலையும் உள்ளது. இது போன்ற பழங்களை உண்ணும்போது, அவை உணவுக் குழாயில் படிந்து செரிமானம் ஆகாமல் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே தோலை நீக்கி,அல்லது கொதிக்கும் நீரில் கழுவி,மெழுகை, ரசாயனத்தை நீக்கிவிட்டு உண்பது நல்லது என அதிகாரி முத்து மாரியப்பன் கூறினார். சில கடைகளில் பழங்களை, அரிவாள் மூலம் மெழுகு தடவப்பட்டிருப்பதை சுரண்டி காட்டி இயற்கைக்கு மாறாக இது போன்ற பழங்களை விற்ற கடைக்காரர்களை கடுமையாக கண்டித்ததுடன் ஒரு கடைக்காரருக்கு ரூ.5000 அபராதம் விதித்தார். மீண்டும் இதேபோல் உள்ள பழங்களை விற்பவர்கள் மீது கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அவர்களின் கடைகளுக்கு சீல், வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.