tamilnadu

img

பிப்.22ல் டிபிஐ முன் காத்திருப்பு... இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு....

சென்னை:
பிப்ரவரி 22 ஆம் தேதி சென்னையில் பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் மாநிலத் தலைவர் செ.அப்பாத்துரை தலைமையில் நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலாளர் க.வெங் கட்ராமன் தலைமையிடச் செயலாளர் ச.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவு-செலவு அறிக்கையை மாநில பொருளாளர் க.சு.பிரகாசம்  சமர்ப்பித்தார். சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் எதிர்கால செயல்பாடு குறித்து வேலைஅறிக்கையை மாநில பொதுச் செயலாளர் .அ.சங்கர் சிறப்புரையாற்றினார். மாநில இணைச் செயலாளர் பெ.ஸ்டீபன் நன்றி கூறினார். மாவட்ட பொறுப்பாளர்கள், 80க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அரசு, அரசு உதவிபெறும் நகராட்சி மாநகராட்சி அரசு உயர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் 2005 முதல் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும்.ஜாக்டோ-ஜியோ போராளிகள் மீது தொடுக்கப் பட்ட வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்.புதிய வேளாண் மசோதா சட்டங்களை திரும்பப் பெற்று விவசாயிகளின் போராட்டத்தை கைவிட வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற முன்வரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாவட்ட தலைநகரங்களில்  காத்திருப்பு போராட்டம், பிப்ரவரி 22 ஆம் தேதி சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என தீர்மானிக்கப் பட்டது.இந்த தகவலை சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சங்கர் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

;