நூறு நாள் வேலையில் கூலி பாக்கி
விவசாயத் தொழிலாளர்கள் ஆவேசம்
விழுப்புரம், மே 20- விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டியில், நூறு நாள் வேலைக்கான கூலி பாக்கி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விக்கிரவாண்டி பிடிஓ அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பி. பால்ராஜ் தலைமை தாங்கினார். 100 நாள் வேலை தொடர்ச்சியாக வழங்க வேண்டும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள கூலி பாக்கி முழுமையாக வழங்க வேண்டும், பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைத்து தர வேண்டும், வீடில்லா அனைவருக்கும் புதியதாக தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். மாவட்டச் செயலாளர் கே. சுந்தரமூர்த்தி, நிர்வாகிகள் பி. கலியமூர்த்தி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.கிருஷ்ணராஜ், எம்.சேகர், ஒன்றியத் தலைவர் எஸ் . அமுதா, ஏ. பிரேமா, பி. சண்முகம், என்.கல்வராயன், பி. பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.