விஐடி ஸ்டார் திட்டம்: ரூ.90 கோடியில் 1014 மாணவர்களுக்கு இலவச கல்வி
வேந்தர் ஜி.விஸ்வநாதன் பெருமிதம்
வேலூர், மே 19- வேலூர் விஐடி பல்கலைக்கழகம், கிராமப்புற மாணவர்களுக்கான உயர் கல்விக்காக கொண்டு வந்துள்ள ஸ்டார் இலவச உயர்கல்வி வழங்கும் திட்டத்தில் ரூ.90 கோடியில் 1014 மாணவர்களுக்கு இலவசமாக உயர் கல்வி கொடுத்து வழங்கி சிறப்பித்துள்ள தாக வேந்தர் ஜி.விஸ்வநாதன் பெருமிதத்துடன் கூறினார். ஸ்டார் திட்ட தின விழா விஐடி அண்ணா அரங்கில் வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் நடை பெற்றது.சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்திக் பங்கேற்று மாணவர்களை வாழ்த்திப் பேசினார். அவர் பேசியதாவது: கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் மிக அவசியமானது. இது கடைக்கோடி யில் உள்ளவர்களுக்கும் சேர வேண்டும். அதற்கு நாம் நம்பிக்கை கொடுக்க வேண்டும். வீட்டில் உள்ள பெற்றோர்கள் தாங்கள் பெற்ற துன்பங்களை, தங்கள் பிள்ளைகள் பெறக்கூடாது என்று சொல்லுவார்கள். அது முற்றிலும் தவறு. அதை புரிய வைத்து கடினமான உழைப்பால் மட்டுமே உயர முடியும் என்ற நம்பிக்கையை தரவேண்டும். கல்வியை எவ்வளவு நாம் பிறருக்கு கொடுக்கிறோமோ, அவ்வ ளவும் பெருகுமே தவிர குறையாது. எங்கள் அகரம் அறக்கட்டளை வாயி லாக இலவச கல்வியை வழங்கி உதவி செய்து வருகிறோம். அந்த வகையில் விஐடியில் அகரம் மூலம் 62 மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். விஐடி பல்கலைக்கழகம் ஸ்டார் திட்டத்தைகொண்டு வந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்து அரசு பள்ளி யில் சிறப்பாக படித்து உயர் கல்வியை பெற இயலாதவர்களுக்கு, இந்த இலவச கல்வியை வழங்கி, வேலைவாய்ப்பையும் பெற்று தந்து உயர்த்தி வருவது பெருமைக் குரியது. இது போல் இந்த திட்டத்தில் பயன் பெறுபவர்கள் தங்கள் ஊரில் உயர்கல்வி படிக்க முடியாதவர்களுக்கு படிக்க உதவ வேண்டும். அதுதான் இத்திட்டம் வெற்றியடைந்தாக அமையும். இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில் வேந்தர் ஜி.விஸ்வ நாதன் தலைமை வகித்து பேசிய தாவது: நமது நாடு கல்வியில் மிகவும் பின் தங்கி உள்ளோம். இதற்கு அரசோடு தனியார்களும் முன் வந்து கல்வியை வழங்கவேண்டும். நமது நாட்டில் உயர்கல்வி 28 விழுக்காட்டினர் மட்டுமே பயின்று வரு கின்றனர்.இதில் தமிழகம் 50 சத விதத்தை எட்டியுள்ளது. வளர்ந்த நாடு களைப்போல் நாம் உயர் கல்விக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும். நமது அரசு வருவாயில் 3 விழுக்காடு மட்டுமே கல்விக்கு நிதி ஒதுக்கி வருகிறது இந்த ஆண்டு 2.5 விழுக்காடு மட்டுமே ஒதுக்கியுள்ளது. வளர்ந்த நாடுகள் 6 விழுக்காடு வரை கல்விக்கு ஒதுக்கிறது. நம் அரசும் கூடுதலாக ஒதுக்க வேண்டும். விஐடி பல்கலைக்கழகம் உயர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து உயர்த்தி வரும் நிலையில் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களை உயர் கல்வியை பெற்று உயர்ந்திட அவர்களை ஊக்கி வைக்கும் வகை யில் விஐடியில் ஸ்டார் திட்டம் கொண்டு வந்து, கிராமப்புற ஏழை எளிய மாணவர்களை குறிப்பாக அரசு பள்ளியில் சிறப்பாக படித்து உயர் கல்வி பெற முடியாமல் இருப்ப வர்களை தேர்வு செய்து அவர்க ளுக்கு முற்றிலும் இலவசமாக உயர் கல்வியை வழங்கி கிராமப்புற மாண வர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இதுவரை ரூ.90 கோடி செலவில் 1014 மாணவ மாணவியர்கள் பலன் பெற்று இன்று நல்ல நிலைக்கு வந்திருப்பது பெருமையளிக்கிறது. மேலும் இதில் பயன் பெறுபவர்கள் படிக்க முடியாத நிலையில் உள்ள ஏழை எளிய மாண வர்களுக்கு உதவி செய்து படிக்க வைக்க வேண்டும். இவ்வாறு ஜி.விஸ்வநாதன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினராக திரைப்பட இயக்குநர் டி.ஜெ.ஞானவேல், விஜடி துணை தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், சேகர் விஸ்வநாதன், செயல் இயக்கு நர் சந்தியா பெண்டா ரெட்டி, உதவி துணை தலைவர் காதம்பரி எஸ். விஸ்வ நாதன், துணைவேந்தர் காஞ்சனா பாஸகர், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மாலிக், பதிவாளர் ஜெயபாரதி மற்றும் ரமணிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.