ஆன்லைனில் பணத்தை இழந்தவர்களுக்கு விழுப்புரம் காவல்துறை மீட்டு உதவி
விழுப்புரம், மே 18- விழுப்புரம் பகுதியில் ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்த வர்களிடம் சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். விழுப்புரம் பகுதியில் சமீப காலங்களில் பொது மக்களை குறிவைத்து குறிப்பாக வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடக வலை தளங்களின் மூலம் தொடர்பு கொள்ளும் அடை யாளம் தெரியாத நபர்கள் பங்குச்சந்தையில் பெரு நிறுவனங்களின் பெயரில் டிரேடிங்கில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்ட லாம், குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறியும், பகுதிநேர வேலை மற்றும் டேட்டா என்ட்ரி டைப்பிங்க் வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி பணமோசடி செய்து வரு கின்றனர். இதில் பணத்தை இழந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பலரிடம் இருந்து புகார் வந்தது. அதன் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்து விரைவாக நடவடிக்கை எடுத்தனர். இழந்த பணத்தை நீதி மன்றத்தின் வாயிலாக மீட்டு கொடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இந்த ஆண்டு இதுவரை 42லட்சத்து50ஆயிரத்தி755 ரூபாயை மீட்டு பாதிக்கப்பட்ட 35 நபர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. அதை ஊக்குவிக்கும் பொருட்டு விழுப்புரம் சைபர் கிரைம் காவல் அதிகாரி கள் மற்றும் ஆளிநர்களை காவல் கண்காணிப்பாளர் பாராட்டியதோடு மட்டு மில்லாமல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவர்கள் இழந்த பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் விக்கிர வாண்டி வேல்முருகன், மேல்மலையனூர் நவநீத கிருஷ்ணன், தளவானூர அமிர்தலிங்கம்,வானூர் பச்சமுத்து, கீழ்பெரும் பாக்கம் ஜெயகாந்தி, ஆண்ட்ரூ ஆகியோர் உள்ளிட்ட 35- நபர்களுக்கு பணம் திருப்பி ஒப்படைத்த னர்.