செங்கல்பட்டு,பிப்.24- செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம்பள்ளி ஊராட்சி பாலாற்றங்கரை யில் மோகன் புருவரீஸ் என்ற தனியார் மதுபான ஆலை உள்ளது. இந்த ஆலை கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான தொழிற்சாலையின் கழிவு நீரை கிராமத்தின் குடி யிருப்பு பகுதியின் அருகே ஏரிபோன்று அமைத்து அதில் தேக்கி வைத்துள்ள னர். மேலும் தொழிற்சாலை யிலிருந்து வெளியேற்றப் படும் சாம்பலையும் அங்கு கொட்டுகின்றனர். கடந்த சில நாட்களாக ஆலையின் கழிவுப் பொருட் களைக் கொட்டிவரும் இடத்திலிருந்து, காற்றின் மூலம் பறந்து கழிவுகள் குடி யிருப்புகளில் படிந்து விடுவதாகக் கூறப்படுகிறது. காற்றில் பறந்துவரும் சாம்பல் மற்றும் கழிவு களால் அப்பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறுகள், மர்மக் காய்ச்சல் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கடந்த இரண்டு நாட்களா கக் கழிவுகள் பறந்து வருவது அதிகமானதால் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராமல் முடங்கிக் கிடக்கின்றனர். மேலும் உணவு சமைக்க முடியா மலும் அவதிப்பட்டுவரு கின்றனர். முகத்தில் துணி கட்டியவாறே நடமாடிவருவ துடன் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்துள் ளோம் என வேதனையுடன் கூறுகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுக் கப்பட்டுள்ளது. எனவே விரைந்து ஆட்சியர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.