tamilnadu

img

தமிழ் எழுத்துலக ஜாம்பவான்களுக்கு விஜயா வாசகர் வட்டம் விருது....

சென்னை;
உலகப்புத்தகத் திருநாளைமுன்னிட்டு விஜயா பதிப்பகத்தின் (கோயம்புத்தூர்) சார் பாக 5வது ஆண்டின் விஜயா வாசகர் வட்ட விருதுகள் வழங்கும் விழா சென்னை பிரஸ் கிளப்பில் நீதியரசர் ஆர்.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.கோயம்புத்தூரில் இயங்கும் விஜயா வாசகர் வட்டம்  தமிழ் எழுத்துலகில் முத்திரை பதித்து வரும் முற்போக்கு எழுத்தாளர்களை பாராட்டும் விதமாக கடந்த 5 ஆண்டுகளாக விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த  நிகழ்வையும், வாழ்த்துரை மற்றும் ஏற்புரையையும் மெய்நிகர் (ஜூம்மீட்டிங்) விழாவாக சென்னை பத்திரிகையாளர் மன் றத்தில் நடைபெற்றது.சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார் தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார். மு.வேலாயுதம் வரவேற்றார். எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம், மயிலை பாலு, எம்.கோபாலகிருஷ்ணன், கவிஞர்.தங்கம் மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.ஜெயகாந்தன் பெயர் தாங்கிய விருதை எழுத்தாளர் இராஜேந்திர சோழன் (அஸ்வகோஷ்), புதுமைப்பித்தன் விருதை எழுத்தாளர் மலர்வதி, கவிஞர் மீரா விருதை எழுத்தாளர் அகரமுதல்வன், சக்தி வை.கோ.நூலகருக்கான விருதை கரூர் அரசு நூலகர் சிவக் குமார், சிறந்த விற்பனையாளர் விருதான வானதி விருதை  கார்த்திகேயன் ஆகியோர் பெற்றனர். நிகழ்ச்சியை முனைவர் உஷாராணி தொகுத்து வழங்கினார்.