புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட வெங்கட்டா நகர் 10 ஆம் எண் வாக்குச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை (மே12) மறு வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்தனர். அதிகாரிகளின் தவறுகளால் மறுவாக்குப்பதிவு புதுச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.