tamilnadu

img

வேலூர் மற்றும் புதுச்சேரி திமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங் கத்தை ஆதரித்து முதல்வர் நாராயணசாமி திறந்த ஜீப்பில் 

சென்று மங்கலம் சட்டமன்ற தொகுதியில் கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் வெ.பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் தேவ.பொழிலன் உள்ளிட்ட கூட்டணி 

கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்துக்கு வாக்குகள் கோரி வேலூர் மண்டி வீதி,காய்கறி மார்க்கெட், அண்ணா சாலை, சுண்ணாம்புக்காரத் தெரு ஆகிய பகுதிகளில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி தலைமையில் பிரச்சாரம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.நாராயணன், என்.காசிநாதன், சக்திவேல் தாலுகா செயலாளர்கள் வி.நாகேந்திரன், சிஎஸ். மகாலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


;