tamilnadu

img

புறநகர் ரயிலில் பயணிக்க தடுப்பூசி சான்று தேவையில்லை  

புறநகர் ரயிலில் பயணிக்க 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ்கள் அவசியமில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் கொரோனா தொற்றும், ஒமிக்ரான் தொற்றும் தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதனைதொடர்ந்து பல புதிய கட்டுப்பாடுகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அந்தவகையில் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழை சமர்ப்பித்த பிறகே பயணம் மேற்கொள்ள முடியும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.  

இந்நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதிமுதல் புறநகர் ரயில்களில் பயணிக்க 2 தவணை கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியமில்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேசமயம் ரயில்களில் வழக்கம்போல் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

;