சென்னை, ஜூலை 17- மணலி புதுநகர் வரைக்கும் மெட்ரோ ரயில் சேவையை நீடிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மக்களவைத் தொகுதி உறுப்பி னர் சசிகாந்த் செந்திலிடம் வலியுறுத்தப் பட்டது. இது குறித்து அவரிடம் அந்த மனுவில், சென்னை மெட்ரோ ரயில் சேவை மிகச் சிறப்பான வகையில் சென்னை மக்களை இணைத்து வருகிறது. அதில் மணலி புதுநகர் மக்கள் 9 கி.மீ. தூரத்தில் உள்ள விம்கோ நகர் சென்று இந்த சேவையை பயன்படுத்தி வருகிறோம். மணலி புதுநகர் மற்றும் சுற்றுவட்டா ரத்தில் 1,20,000 பேரும், 400க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களும், 1,500 வணிக நிறுவனங்களும், 50க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும் உள்ளன. மெட்ரோ ரயில் சேவைக்கு தொடர்வண்டி வசதி இல்லாத தாலும், கண்டெய்னர் லாரிகளால் போக்கு வரத்து நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை யில் தொடர்ந்து பல உயிரிழப்புகள் ஏற்படுவதால் அதை தவிர்க்கும் விதமாக, சென்னை மெட்ரோ ரயில் இணைப்பில் மணலி புதுநகர் பகுதியையும் ஒரு வழித்தட மாக ஏற்று மெட்ரோ ரயில் நிலையத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மணலி புதுநகர், சடையங்குப்பம் கிராமம் ஜோதி நகர் வழியாக விம்கோ நகர் மெட்ரோ அடைவதற்கான சாலை இணைப்பு ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கி றோம். மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் வரை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் வரை பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது.