தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் முதல்முறையாக பஞ்சு விலை புதிய உச்சத்தை எட்டி உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பஞ்சு விலை 2 மடங்காக உயர்ந்து ஒரு கேண்டி ரூ.1,05,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஜவுளித்துறை கடும் பாதிப்புகள் உள்ளாகி உள்ளது. பஞ்சு விலை உயர்வு காரணமாக குறித்த காலத்தில் ஜவுளி உற்பத்தி செய்ய முடியாததால் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்டரை ரத்து செய்து விட்டதாக ஜவுளித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 30 சதவிகித நூற்பாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பஞ்சு விலை உயர்வு தொடர்ந்தால் மேலும் 50 சதவிகித நூற்பாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேவையான பஞ்சு உற்பத்தி செய்யப்பட்டாலும் செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வணிகர்கள் ஊக வணிகத்தில் லாபம் அடைவதாக ஜவுளித்துறையினர் குற்றம் சாட்டி உள்ளனர்.