சென்னை, டிச. 10 - தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகச் சட்டம் -2012இன் படி நாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டது. இது மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இப்பல்கலைக் கழகத்தின் மேலாண்மைக்குழு உறுப்பின ராக- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளுர் தொகுதி எம்எல்ஏ நாகை மாலி கடந்த மூன்று ஆண்டு காலமாக பணி யாற்றி வந்தார். அவரது இந்த பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் மூன்றாண்டுகளுக்கு அரசு நீட்டிப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்து அறிவிப்பை சட்டப்பேரவையில், செவ்வாய்கிழமை (டிச.10) பேரவைத் தலைவர் மு. அப்பாவு வெளியிட்டார்.