சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவின் தலைவராக ஆர்.எஸ்.எஸ். பிரதி நிதியான ஜெ.என்.யூ. துணை வேந்தர் ஜெகதீஷ் குமாரை நியமித்த ஆளுநரின் செயலைக் கண்டித்தும், அவரை நீக்கி விட்டு தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளரை தலைவராக்கக் கோரியும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.