tamilnadu

img

புதிய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கட்டிடம்

சென்னை, மார்ச் 7- சென்னை அண்ணாசலை யில் ஆயிரம் விளக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம் பெனியின் புதிய தலைமை அலுவலகக் கட்டிடத்தை  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுடில்லியில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்,

இந்த கட்டிடம் இந்தியாவின்  முதல் டயக்ரிட் கட்டமைப்பு முறை யில் (கான்கீரிட் தளங்களுக்கு பதில் துருப்பிடிக்காத ஸ்டீலை கொண்டு) கட்டப்பட்டுள்ளது. எஃகு சட்டங்கள் பக்க வாட்டு தூண்கள் மூலம் மையத் துடன் இணைக்கப்பட்டுள்ளன. வழக்கமான கட்டுமானம் போல  நெடுவரிசைகள் அல்லாமல் இந்த துருப்பிடிக்காத எஃகு சட்டங்கள் கட்டிடத்தின் முக்கிய சுமை தாங்கும் கட்டமைப்பாக செயல்படுகின்றன என்று இந்த பணிக்கு எஃகு விநியோகித்த ஜிண்டால்ஸ்டெயின்லெஸ் நிர்வாக இயக்குநர் அபி யுதாய் ஜிண்டால் கூறியுள்ளார்.

அண்ணாசாலையில் அமை ந்துள்ள இந்த முக்கிய கட்டிடம் பூகம்பத்தை தாங்கும் ஆற்றல் கொண்ட அம்சங் களுடன் வடிவமைக்கப்பட் டுள்ளது. இந்த கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக சுமார் 1000 டன் துருப்பிடிக்காத உயர்தர எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தகட்டிடம் 15 தளங்களுடன் 62 மீட்டர் உயரம் கொண்டதாகும். ஐஐடி சென்னை, மும்பை ஆகிய வற்றின் ஒப்புதலுடன் இக்கட்டி டம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.