சென்னை, செப். 9 - கல்வி, சமூக நலத் திட்டங் களை சிறப்பாக செயல் படுத்தும் மாநிலங்களுக்கு நிதி தர மறுப்பதா? என கேள்வி எழுப்பி, ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ எனும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்குத் தர வேண்டிய முதல் தவணை நிதி ரூ. 573 கோடியை வழங்க மறுப்பதை சுட்டிக் காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் கருத்துப் பதி விட்டுள்ளார்.
அதில், “கல்வி, சமூக நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங் களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க மறுக்கிறது. தேசிய கல்விக் கொள்கை கட்டாய மாக திணிக்க முயற்சிக்கிறது மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழும் தமிழ் நாட்டுக்கு எஸ்.எஸ்.ஏ. திட்ட த்தின் கீழ் நிதி ஒதுக்காமல் ஒன்றிய அரசு தாமதம் செய் கிறது. தேசிய கல்விக் கொள் கையை வலுக்கட்டாயமாக ஏற்க வைக்கும் முயற்சியாக ஒன்றிய அரசு நிதி வழங்க மறு ப்பு தெரிவித்து வருகிறது.
தமிழ்நாடு அரசு பள்ளி களில் செயல்படுத்தப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்துக்கு ஒன் றிய அரசின் நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை. கல்வி மற்றும் சமத்துவத்தை ஒன் றிய அரசு ஊக்குவிக்கும் லட் சணம் இதுதானா?” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இதனை நாட்டு மக்களின் முடிவுக்கே விட்டு விடுவதாகவும் முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட் டுள்ளார்.