சென்னை, ஜூன் 28- தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத் துறை தொடர் பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் முடிந்ததும், உறுப்பினர் களின் கேள்விகளுக்குப் பதில் அளி த்து உணவுத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி பேசியதாவது:
“திமுக அரசு ஆட்சிப் பொறுப் பேற்ற பிறகு விவசாயிகளிட மிருந்து கொள்முதல் செய்யும் நெல்லுக்கு ஊக்கத் தொகையை மாநில அரசு மூன்று முறை உயர்த்தி கொடுத்துள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சியின் பத்தாண்டு காலத்தில் இந்த தொகை உயர்த்தப்படவில்லை. வரும் செப்டம்பர் 1 முதல் சன்னரக நெல்லுக்கு 120 ரூபாயும், பொது ரகத்திற்கு 175 ரூபாயும் உயர்த்தி வழங்குவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தேர்தல் வாக்குறுதி யை நிறைவேற்றும் வகையில் அடுத்த ஆண்டுகளில் குவிண்டா லுக்கு 2500 ரூபாய்க்கும் அதிகமாக வழங்கப்படும்.
உணவுப் பொருள் வழங்கல் துறையில் கருணை அடிப்படை யில் பல்வேறு வகையிலும் 4 ஆயிரத்து 797 நபர்களுக்கு வேலை வாய்ப்பு புதிதாக வழங்கப்பட்டுள் ளது. சுமை தூக்கும் தொழி லாளர்களுக்கு 40 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டைக்கு பத்து ரூபாய் கூலியை உய ர்த்தி வழங்கி இருக்கிறோம்.
புதிய குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு வருகின்றன!
புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த பலரும் மாதக்கணக்கில் காத்திருப்பதாக உறுப்பினர்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரி வித்தனர். திமுக ஆட்சி பொறுப் பேற்றது முதல் தற்போது வரை 15 லட்சத்து 79 ஆயிரத்து 393 குடும்ப அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் புதிதாக குடும்ப அட்டை கேட்டு 2 லட்சத்து 92 ஆயிரத்து 43 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 9 ஆயி ரத்து 784 விண்ணப்பங்கள் ஏற்கப் பட்டு, ஆதார் எண்ணுடன் சரி பார்க்கப்பட்டு அட்டைகள் அச்சி டும் நிலையில் உள்ளன. மீதமுள்ள வற்றை பரிசீலித்து ஆய்வு செய்து தகுதியுள்ள அனைவருக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப் படும். மக்களவை தேர்தல் நடத்தை விதிகளால் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை களை வழங்க முடியவில்லை.
கண் கருவிழி, ரேகை பதிவுக்காக பொருட்களை நிறுத்தக்கூடாது
மாநிலத்தின் பல பகுதி களிலும் கண் கருவிழி முதல் ரேகை பதிவு சரிபார்ப்பு செய்வது வரை, அவற்றில் பல்வேறு சிர மங்கள் இருப்பதை அரசின் கவ னத்திற்கு கொண்டு வந்துள்ளனர். எனவே, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் தற்போது 9 ஆயிரத்து 182 ரேசன் கடைகளில் பொருட் கள் வழங்கப்பட்டு வரு கின்றன. விரைவில் அனைத்துக் கடைகளிலும் கண் கருவிழி சரிபார்ப்பு முறை செயல்படுத்தப் படும். அதுவரைக்கும் குடும்பத் தார்கள் அனைவருக்கும் பொருட் கள் வழங்க வேண்டும் என்று விற் பனையாளர்களுக்கும் அறிவுறுத்தப் படும்.
மாதம் முழுவதும் பாமாயில், துவரம் பருப்பை பெறலாம்!
கடந்த ஏப்ரல் மாதம் முதல் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளியில் ஏற்பட்ட பல் வேறு சிரமங்களால் நுகர்வோ ருக்கு முறையாக இந்தப் பொருட் களை வழங்க முடியவில்லை. தற் போது, அரசு எடுத்துள்ள நட வடிக்கையால் மே மாதத்திற்கான பொருட்களை ஜூன் மாதம் முழு வதும் பெற்றுக்கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, அனைத்து ரேசன் கடைகளிலும் மே, ஜூன் மாதத்திற் கான துவரம் பருப்பு மற்றும் பாமா யிலை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம். அதற்கு தேவை யான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மண்ணெண்ணெய்யைக் குறைத்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசு!
தமிழ்நாட்டிற்கு பொது விநியோ கத் திட்டத்தின் கீழ் வழங்கும் மண் ணெண்ணெய் அளவை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து குறைத்துக் கொண்டே வருகிறது. பலமுறை கோரிக்கை விடுத்தும் ஏற்க வில்லை. கடந்த மாதம் வெறும் ஆயிரத்து 84 கிலோ லிட்டர் மட்டுமே வழங்கி இருக்கிறது. இதனால் மலைப்பகுதிகளில் வசி க்கும் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல முறை ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதிவிட்டோம்.
அதற்கு நமது மாநிலத்தில் எரி வாயு சிலிண்டர் அதிகம் பயன்பாட் டில் உள்ளதாக கூறியிருக் கிறார்கள். எனவே முதலமைச்சரு டன் ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நகர்ப்புற பகுதிகள், 800 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ஊரகப் பகுதிகள் என தமிழ்நாடு முழுவதும் பிரிக்கப் பட்டு 699 முழுநேர கடைகளும் 1310 பகுதி நேர கடைகளும் திறக்கப் பட்டுள்ளது. வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நியாய விலைக் கடைகளுக்கு படிப்படியாக சொந்த கட்டடம் கட்டிக் கொடுக்கப்படும்.
புதிதாக 20 அறிவிப்புகள்
அதனைத் தொடர்ந்து 20 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமை ச்சர், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மணிகள் முறையாக அரவை செய்யப்பட்டு பொது விநியோகத் திட்டத்திற்கு சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழ கம் மற்றும் தனியார் அரவை ஆலைகளின் மின் நுகர்வு கண்கா ணிக்கப்படும். வடசென்னை, தென் சென்னை, திண்டுக்கல், காஞ்சி புரம், கன்னியாகுமரி, கிருஷ்ண கிரி, நாமக்கல், நீலகிரி, சிவகங்கை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நூறு அமு தம் நியாய விலைக் கடைகள் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படு த்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறி னார்.