சென்னை: 4 ரயில் விபத்துகளை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களை அக்டோபர் 12 அன்று மருத்துவ மனையில் நேரில் சந்தித்து விசாரித்த துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறினார். பின்னர் துணை முதல்வர் செய்தியாளர்களி டம் கூறுகையில், “அமைச்சர், எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள னர். மாநில அரசு சார்பில் 22 ஆம்புலன்ஸ்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. எந்த உயிரிழப்பும் இல்லை. ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மாவட்ட நிர்வாகம், மருத்துவக் குழுவினர் உள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து மீட்பு பணியை கண்காணித்து வருகிறார். ரயில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தொடர்ச்சியாக விபத்துக்கள் நடக்கின்றன” என்று கூறினார்.