சென்னை,அக்டோபர்.21- மருத்துவ விதிகளை மீறியதற்காக யூடியூபர் இர்ஃபானுக்கு மருத்துவத்துறை சாரிபில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தனது மனைவியின் பிரவத்தின் போது மருத்துவ விதிகளை மீறி யூடியூபர் இர்ஃபான் தொப்புள் கொடியை வெட்டி, வீடியோ வெளியிட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
இதுகுறித்து இர்ஃபான் மீதும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீதும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்ட சர்ச்சையில் யூடியூபர் இர்ஃபானுக்கு மருத்துவத்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.