சென்னை,அக்டோபர்.22- குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது மனைவியின் பிரசவத்தின் போது மருத்துவ விதிகளை மீறி விவகாரத்தில் குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டி வீடியோ வெளியிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது
இதனையடுத்து இர்ஃபானுக்கு மருத்துவத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. தற்போது சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர் நிவேதிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மருத்துவமனையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.