tamilnadu

img

கல்லூரி இறுதி பருவத் தேர்வு கட்டாயம் - யுஜிசி

கல்லூரிகளில்  இறுதி பருவத் தேர்வு காட்டாயம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. 
நாடு முழுவதும் கொரோனா பெருந் தொற்று கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வரும் சூழலில் தமிழகத்தில் இதுவரை பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வில்லை. இந்நிலையில் கல்லூரி இறுதி பருவத் தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. 
இந்நிலையில் அரியர் மாணவர்களக்கு தேர்ச்சி அளித்து, சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக, சென்னை பல்கலை வரம்பிற்கு உட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இந்நிலையில் அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. யுஜிசி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் இறுதி பருவ மாணவர்களின் முந்தைய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை.

இறுதி பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியமானது. செப்டம்பர் 30க்குள் இறுதி பருவத் தேர்வு நடத்தாவிட்டால்  கால அவகாசத்தை  நீட்டிக்க  கோரலாம். இறுதி பருவ தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது.