tamilnadu

img

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு அஞ்சலி

கேரள மாநிலம் வயநாட்டில் வரலாறு காணாத நிலச்சரிவில் சிக்கி புதையுண்டு உயிர் நீத்த மக்களுக்கு புதனன்று (ஜூலை 31) முகப்பேர் மேற்கு பேருந்து நிலையம் அருகில்  மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகப்பேர் கிளைகள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கிளைச் செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சரவணச்செல்வி உள்ளிட்டோர் பேசினர்