சென்னை, ஜூன் 11 – கழகங்களின் வரவுக்கும் செலவுக்கு மான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் ஒதுக்கி வழங்க கோரி போக்குவரத்து ஊழியர்கள் செவ்வாயன்று (ஜூன் 11) பணிமனைகள் தோறும் பிரச்சாரத்தை தொடங்கினர். 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும், 2022 டிசம்பர் மாதத்திற்கு பிறகு ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வு கால பணப்பலன்கள் வழங்க வேண்டும்,
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 104 மாத அக விலைப்படி உயர்வை வழங்க வேண்டும். 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த வர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 24ந் தேதி காலை 10 மணி முதல் 25ந் தேதி காலை 10 மணி வரை மாநிலம் முழுவதும் 100 மையங்களில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது. இந்த போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி, அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சென்னையில் ஜூன் 11-13 தேதிகளில் பிரச்சாரம் நடைபெறு கிறது.
ஜூன் 11 அன்று திருவான்மியூர் பணி மனையில் சங்கத்தின் தலைவர் ஆர்.துரையும், ஐயப்பன்தாங்கல் பணிமனையில் பொதுச் செயலாளர் வி.தயானந்தமும், தாம்பரம் பணிமனையில் மூத்த தலைவர் எம்.சந்திரன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் குருசாமியும் தொடங்கி வைத்து பேசினர். அடையாறு, மந்தைவெளி, குரோம் பேட்டை-2, வடபழனி, தி.நகர், கிளாம் பாக்கம், பெரம்பூர், குன்றத்தூர் உள்ளிட்ட 15 பணிமனைகளில் பிரச்சாரம் நடை பெற்றது.