tamilnadu

மாற்றுப் பாலினத்தவரை சிறப்புப் பிரிவினராகக் கருத வேண்டும்! அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை,ஜூன் 13- கல்வி, வேலைவாய்ப்பில் மாற்றுப் பாலினத்தவரை, சிறப்புப் பிரிவினராக கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள துணைக் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர், உதவி ஆணையர் (வணிக வரி), நில நிர்வாகத்தின் துணை வட்டாட்சி யர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப தேர்வா ணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, கடந்த 2017-18 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 ஏ, தேர்வில் கலந்து கொண்ட மாற்றுப் பாலின விண்ணப்பதாரர் அனுஸ்ரீ, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தன்னை அனுமதிக்க வில்லை என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்ப ராயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், மாற்றுப் பாலினத்தவரை சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் எனக் கருதி, கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து விதமான இடஒதுக்கீடு சலுகை களையும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 2014 ஆம் ஆண்டு தீர்ப்பளித்து உள்ளது.

ஆனால், ஒன்றிய  அரசோ, மாநில அரசோ இது சம்பந்த மான விதிகளை இதுவரை வகுக்க வில்லை என வாதிட்டார். இதனால் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் அவலமான நிலையில் வாழ்க்கை நடத்த வேண்டிய சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதி பவானி சுப்பராயன், கல்வி, வேலை வாய்ப்பில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு போது மான வாய்ப்பை வழங்கி, தரமான வாழ்க்கையை வாழ வைக்க வேண்டியது அரசின் கடமை என்றார்.

 மாற்றுப் பாலினத்தவர்களை கல்வி  மற்றும் வேலைவாய்ப்பில் ஆண் களாகவோ, பெண்களாகவோ கருதாமல் தனிப் பிரிவினராக கருதி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார். மேலும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான பிரத்யேக விதிகளை வகுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் மாற்றுப் பாலினத் தவர்களை ஆண்கள், பெண்கள் பிரிவில் சேர்க்கக் கூடாது என்று அறிவுறுத் திய நீதிபதி, மனுதாரரின் சான்றிதழை சரிபார்க்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.