tamilnadu

மின்மாற்றிகள் அமைத்துதரப்படும்: அதிகாரிகள் உறுதியால் போராட்டம் வாபஸ்

திருவள்ளூர், ஜூலை 14- திருவள்ளூர் தாமரைப்பாக்கம் ஊராட்சிகளுக்கு தனித் தனியே மின்மாற்றிகள் அமைத்து தரப்படும் என மின்வாரிய அதிகாரிகள் உறுதி அளித்ததால்  போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  மாகரல்,  கொமக்க ம்பேடு, தாமரைப்பாக்கம்  ஊராட்சிகளில் சிறு, குறு விவசாயம் அதிகமாக நடை பெற்று வருகிறது.  இப்பகுதியில் அடிக்கடி  மின்தடை ஏற்படுவதால் வயல்களுக்கு சரியான நேரத்தில் நீர் பாசனம்  குறைகிறது.  இதனால்  நெல் உள்ளிட்ட தோட்டப் பயிர் களின் சாகுபடி வெகுவாக குறைவதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சீரான மின்விநியோ கம் செய்ய வேண்டும், பழுதடைந்த மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் கம்பிகள் மாற்ற வேண்டும். மாகரல் ஏரியில்  உள்ள மின் கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வரும் ஜூலை 15 அன்று  பாண்டேஸ்வரம் துணை மின் நிலையம் முன்பு  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து, இதுகுறித்து ஆயிரம் துண்டு பிர சுரங்கள்  பொதுமக்கள் மத்தியில் விநி யோகிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

அரசு அதிகாரிகளுக்கு மனு அனுப்பப் பட்டது. இதனை தொடர்ந்து ஜூலை 13  அன்று கொமக்கம்பேடு கிராமத்தில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில், மின்சார வாரிய  உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி மின் பொறியாளர் ஆகியோர் விவசாயிகள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது  ஒரு வாரத்தில் பழுதடைந்த மின் கம்பங்களையும், மின் கம்பிகளையும்  மாற்றி தரப்படும்.  ஒரு மாத காலத்தில் ஏரிக்குள் செல்லக்கூடிய மின் கம்பங்களை சாலையோரம் அமைக்கப்படும்.

மாகரல், கொமக்கம்பேடு, தாமரைப் பாக்கம் ஆகிய 3 ஊராட்சிகளுக்கும் தனித் தனியாக புதிய மின்மாற்றிகள்  அமைக்கப் படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து திங்கட்கிழமை (ஜூலை15) நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் அதிகாரிகளின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்திவைக் கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். a\

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், ஒன்றிய செயலாளர் எம்.பழனி,  மாகரல்  அருள், மதன், தேவேந்திரன், கொமக்கம் பேடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்  என்.மணி, தாமரைப் பாக்கம் ஊராட்சி  மன்றத் முன்னாள் தலைவர் கே.வெங்கடே சன், செல்வம், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.