சென்னை, செப்,8 கடுமையான பொருளாதார சூழலிலும் சில நிறுவனங்களின் டிராக்டர்கள் விற்பனை கண்டுள்ளளன. ‘இன்டர்நேஷ்னல் டிராக்டர்ஸ் லிமிடெட், (ஐடிஎல்) தொடர்ந்து இந்த ஆண்டும் சாதனை படைத்துள்ளது. இதன் சோனாலிகா மற்றும் சோலிஸ் பெயரில் அமைந்துள்ள டிராக்டர்கள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த டிராக்டர் சந்தையில் 14.7விழுக்காடு பங்கை கைப்பற்றியுள்ளன. இதுகுறித்து ஐ.டி.எல். குழுமத்தின் செயல் இயக்குனர் ராமன் மிட்டல் கூறுகையில் ஒரு பிராண்டின் உண்மையான வலிமை, மோசமான சந்தை நிலவரத்தின்போதுதான் வெளிப்படும் என்பார்கள். அந்த வகையில், இன்றுள்ள மிகக் கடுமையான சந்தை சூழலில் இந்த விற்பனையை எட்டியுள்ளதில் இருந்தே எங்களது பிராண்டின் வலிமை நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.