tamilnadu

சென்னை திருப்பெரும்புதூர் முக்கிய செய்திகள்

அண்ணாசாலையில்  வெடிகுண்டுகள் வீச்சு:  ரவுடியின் மனைவி உள்ளிட்ட 4 பேர் கைது

சென்னை, அக். 11- அண்ணாசாலையில் பட்டப்பகலில் வெடிகுண்டுகளை வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் ரவுடியின் மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணாசாலை பார்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தோட்டம் சேகர். ரவுடியான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது மனைவி மலர்கொடி சட்டம் படித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் தனது மகன் அழகர் ராஜாவுடன், வியாழனன்று  காலையில் எழும்பூர் நீதிமன்றத்திற்கு  சென்றார். பிற்பகலில் மலர்கொடியும், அழகர்ராஜாவும் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.  அண்ணாசாலை கேசினோ தியேட்டர் அருகில் சென்றபோதுமோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல் திடீரென மலர்கொடியையும், அவரது மகன் அழகர் ராஜாவையும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி வெட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் நிலைகுலைந்தனர்.  தாக்குதலில் இருந்து தப்புவதற்கு ஆட்டோவில் இருந்தவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அது நடுரோட்டில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது.பின்னர் அந்த  கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. அதே நேரத்தில் வெடிகுண்டு வீச்சில் அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு வெடிச்சத்தத்தால் செவித்திறன் பாதிக்கப்பட்டது. அவரது ஆட்டோவில் சவாரி சென்ற ஒரு பெண்ணும், ஆணும் லேசான காயத்துடன் தப்பினர்.ரவுடிகள் தாக்கியதில் பெண் வக்கீலின் முதுகில் வெட்டுக்காயங்கள் விழுந்தன. அவரது மகன் அழகர் ராஜாவுக்கும், கைகளில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். வெடிகுண்டு வீச்சு தொடர்பாக  மலர்கொடி, அவரது மகன் அழகர் ராஜா, மணிகண்டன், விஜயகுமார் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான கவுதமன், சங்கரை போலீசார் தேடி வருகிறார்கள். மலர்கொடியை வெட்டி கொல்ல முயன்ற வழக்கில் தப்பி ஓடிய அரவிந்தன், அப்பு ஆகிய இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

 சடையங்குப்பம் பகுதியில்  பொதுமக்கள் சாலை மறியல்  

திருவொற்றியூர், அக்,12-  சென்னை, திருவொற்றியூர் பகுதி, சடையங்குப் பத்தில், குடிநீர் பிரச்சினை தொடர்பாக, பொதுமக்கள்  வெள்ளியன்று (அக்.11) சாலை மறியலில் ஈடு பட்டனர். சென்னை, திருவொற்றியூர், சடையங்குப்பம், பர்மா நகர் பகுதியில், குடிநீருக்காக  குழாய் அமைக்  கப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாக  இந்த குழா யில் குடிநீர் சரிவர வருவதில்லை. அப்படி குடிநீர்  வந்தாலும் அசுத்தமாக வருகிறது என்று அப்பகுதி  மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து  சம்மந்தப்பட்ட அதி காரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவ டிக்கை இல்லையாம். இதனால் கோபமடைந்த பொது மக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சு நடத்தி னார். சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து குடி நீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறியதை யடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர்.

போதையில் மாடியிலிருந்து தவறிவிழுந்த வாலிபர் பலி 

 திருப்பெரும்புதூர், அக். 11- திருச்சி மாவட்டம் பரமசிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் அருண் 23. இவர் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் வாடகை விடுதியில் தங்கி மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏசியன் பெயிண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வெள்ளியன்று  இரவு நண்பர்களுடன் மது அருந்தி விட்டு மாடியில்  செல்போன் பேசியபடி  மதுபோதையில் எதிர்பாராதவிதமாக மேல் தளத்தில் இருந்து தவறி விழுந்தார்.இதில் பலத்த காயம் அடைந்த அருண் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.