அம்பத்தூர், ஜூலை 13- ஆவின் நிறுவனத்தில் லாரி தொழிலாளர்க ளுக்கு கழிப்பறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கோரியும், பெட்ரோல்-டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வலி யுறுத்தியும் சென்னை பெருநகர் மோட்டர் வாகன தொழிலாளர் சங்கம் (சிஐடியு), தமிழ்நாடு பால்வள தனியார் லாரி தொழி லாளர் சங்கம் சார்பில் கொரட்டூர் ஆவின் பால்பண்ணை அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் பி.என்.உண்ணி தலைமையில் பொதுச் செயலா ளர் வி.குப்புசாமி, உதவி பொதுச் செயலா ளர் வி.பாஸ்கர், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சு.லெனின்சுந்தர், சங்கத்தின் தலை வர் பழனிச்சாமி, செயலாளர் லொகநாதன், பொருளாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய வி. குப்புசாமி,“ஆவின் நிறுவனத்தில் லாரி தொழி லாளர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இரவு பகல் பாராது பணியாற்றும் இவர்களுக்கு ஊதியத்தை மாதமாதம் வழங்க வேண்டும்” என்றார். தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமான பணப் பலன்களை காலம் கடத்தாமல் வழங்க வேண்டும். லாரி ஓட்டுநர்களை, உதவியாளர் களை மரியாதையாக நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.