இன்று யுபிஎஸ்இ மெயின்ஸ் தேர்வு
சென்னை, செப். 19 - ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளில் 1056 பதவிகளை நிரப்புவதற்கு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) கடந்த ஜூன் 16 அன்று நடத்திய முதல்நிலைத் தேர்வில், நாடு முழுவதும் 14,627 பேரும், தமிழ கத்தில் மட்டும் 650 பேர்களும் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், இவர்களுக் கான மெயின்ஸ் தேர்வு செப்டம்பர் 20 துவங்கி 5 நாட்கள் நடக்கிறது. இந்தியா முழுவதும் 24 நகரங்களிலும், தமிழ்நாட்டிலும் சென்னையிலும் இத்தேர்வுகள் நடைபெறுகின்றன.
அக்டோபர் 1-ல் அணுக்கனிம சுரங்கத் திட்ட கருத்து கேட்பு
கன்னியாகுமரி, செப். 19 - கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கத்தை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. கிள்ளியூர் பகுதி யில் 5 கிராமங்களில் 1,144 ஹெக் டேர் பரப்பில் அணுக்கனிமங் களை தோண்டி எடுக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதுதொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை பெறு வதற்காக அக்டோபர் 1 அன்று கருத்துக் கேட்பு கூட்டத்தை அறி வித்துள்ளது.