சென்னை:
ரம்ஜான் பண்டிகை மே 25 அன்று கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. அதனால், முஸ்லிம்கள் வீட்டிலேயே, சமூக இடைவெளி யைப் பின்பற்றி தொழுகை நடத்தி வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் திங்களன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இது தொடர்பாக அரசு தலைமை காஜி சலா வுதீன்முகமது அயூப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், ஷவ்வால் மாதத்துக் கான புதிய பிறை சனிக்கிழமை தென்படாத நிலையில், ரம்ஜான் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார்.