சென்னை, ஆக. 7 - தெரவோர வியாபாரிகளின் பிரச்சனைகளை தீர்க்க மாநில அளவில் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
சிபிஎம் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் செவ்வாயன்று (ஆக.7) புரசைவாக்கத்தில் தெரு வோர வியாபாரிகளின் வாழ்வாதார மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கே.பால கிருஷ்ணன் பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் பல்லாயி ரக்கணக்கான மக்கள் தெருவோர வியாபாரிகள் உள்ளனர். காவல் துறை, மாநகராட்சி அதிகாரிகள் திடீ ரென்று சென்று கடைகளை அகற்று வது, புல்டோசரை கொண்டு அப்புற ப்படுத்துவது, வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது, பொருட்களை சேத ப்படுத்துவது போன்ற அராஜகங்களில் ஈடுபடுவது சட்டவிரோதம். மாநக ராட்சி, காவல்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகளை விட்டு விட்டு ஏழை எளிய மக்களை வதைக் கின்றனர். இதற்கெதிராக களத்தில் மட்டுமல்ல, சட்டரீதியாகவும் போராடு வோம்.
சென்னையில் கஞ்சா, போதைப் பொருள் வியாபாரம் சர்வசாதார ணமாக நடக்கிறது. பள்ளி மாணவர்கள் கூட போதைக்கு அடிமையாகி உள்ளனர். போதைப்பொருள் வியா பாரம் போட்டி அரசாங்கத்தையே நடத்துகிற அளவுக்கு செயல்படு கிறது. காவல்துறையால் இதை கட்டு ப்படுத்த இயலவில்லை. காவல் துறைக்கு தெரியாமல் இதெல்லாம் நடக்கவில்லை.
பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படு கொலையொட்டி நடைபெற்று வரும் விசாரணை மர்ம நாவல் போல நீடிக்கி றது. கன்னிதீவு கதை மாதிரி தொடர்கிறது. இந்த கொலையில் ஏராளமான பணம் கைமாறியுள்ளது; கூலிப்படையினர் சம்பந்தப்பட்டுள் ளனர். இந்த போதை வியாபாரமும், கூலிப்படை செயல்பாடுகள் காவல் துறைக்கு தெரியாமலா உள்ளது. தெரு வோர வியாபாரிகள் மீது காட்டும் தீவி ரத்தில் 5 விழுக்காட்டை இவர்கள் மீது காட்ட வேண்டியதுதானே? . சாதாரண தெருவோர வியாபாரிகள் சில ஆயிரங்கள் முதல் போட்டு கடை வைக்கின்றனர். இவர்களிடம்தான் பாய வேண்டுமா? காவல்துறையின் ஆயுதங்கள் ஏழை மக்கள் மீதே உப யோகப்படுத்தப்படுகிறது. புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அடுக்குமாடி வீடு, கல்லூரி, வணிக வளாகம் கட்டியவர்களை விட்டு விட்டு, குடிசைவீடுகளை தள்ளி சாய்க்கிறார்கள். இதெல்லாம் தேவையா? ஏழை எளிய மக்க ளுக்காக ஆதரவாக அரசு செயல்பட வேண்டும். ஏழை எளிய மக்களை அகற்றி விட்டால் சென்னை எப்படி இயங்கும்? தெருவோர கடைகள் இடையூறாக இருந்தால் ஒழுங்குபடுத்துவதில் ஆட்சேபனை இல்லை. உயிர் பறி போகிற அளவிற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமா? புல்டோசர் கொண்டு கடைகளை அகற்றினால் தேவையற்ற எதிர் விளைவுகள் உரு வாகும். உ.பி.யில் புல்டோசர் கலாச் சாரம் தவிடு பொடியாகி விட்டது. புல்டோசர் அரசியல் மக்களிடம் எடுபடாது. தெருவோர கடைகள் அகற்றுவது தொடர்பாக முதலமைச் சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். மாநிலம் முழுவதும் 10 லட்சம் தெருவோர வியாபாரிகள் உள்ளனர். இவர்களின் பிரச்சனையை தீர்க்க மாநில அளவில் அதிகாரியை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜி.செல்வா
கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா பேசு கையில், “மக்கள் சட்டப்படி செயல் படும்போது, அதிகாரிகள் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகின்றனர். எழும்பூர், என்எஸ்சி போஸ் சாலை சாலையில் அகற்றிய கடைகளை மீண்டும் செயல்பட வைத்தது செங்கொடி. கோடம்பாக்கம் ரயிலடி, காலடிப்பேட்டை, பெசன்ட் நகர் என பல பகுதிகளில் அதிகாரிகளின் அரா ஜகம் தொடர்கிறது. எளிய மக்களை வதைக்கும் செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து உள்ளாட்சிகளிலும் நகர விற்பனை குழு தேர்வு செய்து சட்டப்படி செயல்பட வைக்க வேண்டும். வியா பாரிகளின் உரிமை போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி முன்நிற்கும்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, சிபிஎம் எழும்பூர் பகுதிச் செயலாளர கே.முருகன், சென்னை மாநகர் சிறு கடை வியாபாரி சங்கங்களின் கூட்ட மைப்பு பொதுச்செயலாளர் எம்.வி.கிருஷ்ணன், வழக்கறிஞர் திரு மூர்த்தி, புரசைவாக்கம் வியாபாரிகள் சங்க தலைவர் பி.கே.மூர்த்தி, சிஐடியு நிர்வாகிகள் எஸ்.கே.முருகேஷ் (சாலை போக்குவரத்து), ப.சுந்தரம் (தையல்), ஆர்.அருள்குமார் (சுமைப்பணி), ஆ.பிரியதர்ஷினி எம்.சி., மற்றும் நகர விற்பனைக்குழு உறுப்பினர்கள் பேசினர்.
தெருவோர வியாபாரிகள் (வாழ்க்கை பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம்) - 2014ன்படி, நகர விற்பனை குழு வாயிலாக வியாபார மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொள்ள
வேண்டும். மாறாக, காவல்துறை துணையோடு சட்ட விரோதமாக கடைகளை அகற்றுவதை கைவிட வேண்டும்.
சென்னையில் 15 மண்டலங்களுக்கும் 15 நகர விற்பனைக் குழுவை சட்டத்திற்குட்பட்டு மாநகராட்சி தேர்வு செய்யவில்லை. எனவே, சென்னை உயர் நீதி மன்றம் அந்த நகர விற்பனை குழுக்களை கலைத்தது. ஒருநகர விற்பனைக்குழுவாக மாற்றியது. இதில் 6 பேர் வியாபாரிகளாக உள்ளனர். இக்குழு செயல்படாத தன்மையில் உள்ளது. மாநகரம் முழுவதும் உள்ள வியாபாரிகளைபிரதிநிதித்துவப்படுத்த, பிரச்சனைகளை கையாள இந்த ஒரு குழு போதுமானதில்லை. எனவே, சட்டத்தை முறையாக பின்பற்றி மண்டல அளவில் நகர விற்பனைக் குழுக்களை அமைக்க
வேண்டும்.
தெருவோரா வியாபாரிகள் சட்டப்படி குறைதீர்வு குழுவை மாநகரட்சிஅமைக்கவில்லை. இதனால் வியாபாரிகள் நீதிமன்றத்தை நாட வேண்டிஉள்ளது. எனவே, ஒரு சிவில் நீதிபதி அல்லது நீதித்துறை மாஜிஸ்ட்ரேட்,இரண்டு தொழில் வல்லுனர்கள் கொண்ட குறை தீர்ப்பு குழுவை அமைக்கவேண்டும்.
-மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து...