சென்னை, ஜூலை 4- சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன் னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலை யில், அவரது நீதிமன்றக் காவலை ஜூலை 8-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதி மன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.