tamilnadu

img

தத்துவார்த்த போராட்டத்தை முன்னெடுக்க தீக்கதிர் எனும் பேராயுதம் இன்றியமையாதது!

சென்னை, ஜூலை 18- தத்துவார்த்த, சித்தாந்த போராட்டத்தை முன்னெடுக்க தீக்கதிர் எனும் பேராயுதம் இன்றிய மையாதது என சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறி னார். தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் நினைவு தினம், நூல்கள் அறிமுகம், தீக்கதிர் சந்தா ஒப்படைக்கும் நிகழ்ச்சி தோழர் பி.ஆர்.பர மேஸ்வரன் நினைவு நூலகம் சார்பில் ஓட்டேரியில் உள்ள ஏ.பி. நினைவகத்தில் புதனன்று (ஜூலை 17) நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.பூபாலன் தலைமை தாங்கினார். தீக்கதிர் 226 ஆண்டு சந்தா, 6 மாத சந்தா 83 என மொத்தம் 309 சந்தாக்களுக்கான தொகை 5 லட்சத்து 33 ஆயிரத்து 900 ரூபாயை பொறுப்பாளர் கே.எஸ்.கார்த்தீஷ் குமார் வழங்க சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பெற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசுகை யில், சென்னையில் கடுமையான போராட்டங்கள் நிறைந்த காலத்தில் தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளராக பொறுப் பேற்றார்.

அப்போது பலம் வாய்ந்த தொழிற்சங்கம் என்றால் ஓட்டல் தொழிலாளர் சங்கம் மட்டும்தான். அதற்கு அடுத்த படியாக போக்குவரத்து ஊழியர் சங்கம் இருந்தது. அன்று நடை பெற்ற பல போராட்டங்கள் ஆட்சி யாளர்களால் கடுமையாக ஒடுக்கப்பட்டன. பழிவாங்கப்பட்ட, வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழி லாளர்களில் பலர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள். கட்சித் தோழர்களை, தொழிற்சங்க உறுப்பினர்களை ஒருங்கிணைத்து அவர்களை நம்பிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட வைத்ததில் பி.ஆர்.பரமேஸ்வரன் உள்ளிட்ட தலை வர்களுக்கு பெரும் பங்கு இருந்தது.  

போராட்டங்களை தொழிற்சங்கம் மட்டும் நடத்தினால் போதாது, அதற்கு ஆதரவாக அரசியல் கட்சிகளையும் அணி திரட்ட வேண்டும் என்று கூறி, அவரே அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி, அரசியல் இயக்கமாக மாற்றியவர்.   படிக்கத் தெரிந்த அனைவரும் தீக்கதிர் படிக்க வேண்டும். அப்போதுதான் தத்துவார்த்த ரீதி யாக, சித்தாந்த ரீதியாக  அரசியல் தெளிவுபெற முடியும், விவாதம் நடத்த முடியும், மற்றவர்களை அணி திரட்ட முடியும். அவர் பின்பற்றிய நடைமுறைகளை, மேற்கொண்ட பணிகளை முன்னெடுப்போம் என்று அ.சவுந்தரராசன் கூறினார்.

நூல்கள் அறிமுகம்

முன்னதாக தோழர் பி.ஆர்.பரமேஸ்வரனின் “மனித குலத்திற்கு வழிகாட்டும் மார்க்சியம்” என்ற நூலை போக்குவரத்து இடைக்கமிட்டி உறுப்பினர் ஏ.ஆர்.பாலாஜியும், “நினைவுகள் அழிவ தில்லை”, “போராட்டமே வாழ்க்கை யாக” எனும் நூல்களை சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.மணி மேகலையும் அறிமுகம் செய்து பேசினர். முன்னதாக மாதவரம் பகுதிச் செயலாளர் வி.கமலநாதன் வரவேற்றார். ஆவடி பகுதிச் செய லாளர் அ.ஜான் நன்றி கூறினார்.