சென்னை, டிச. 18 - தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசல பதிக்கு, 2024-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப் பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் சாகித்திய அகாடமி விருது வழங்கப் பட்டு வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான விருதுகள் புத னன்று அறிவிக்கப்பட்டன.
இதில், தமிழ்மொழிக்கான பிரிவில், பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சியும் 1908’ என்ற ஆய்வு நூல், சாகித்திய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 1908-ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று வ.உ.சி. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
அவர்கள் மீது பெரும் அடக்குமுறை ஏவிவிடப்பட்ட நிலை யில், அதற்கு எதிராகவும் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது. இந்த எழுச்சி மற்றும் அதன் விளைவுகள் குறித்து ஒரு விரிவான ஆய்வாக ‘திருநெல் வேலி எழுச்சியும், வ.உ.சியும் 1908’ நூலை ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதியிருந்தார். அந்த நூலுக்கே தற்போது சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுக் களையும் தெரிவித்து வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து
‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சியும் 1908’ நூலுக்காக 2024-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருதை வென்றுள்ள பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக வெளி யிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்தியாவின் முக்கியமான ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியும், சுதேசி சிந்தனையின் அடையாளமும் ஆன வ.உ.சிதம்பர னாரின் வரலாற்றை ஆய்வு செய்து பல கட்டுரைகளும், நூல்களும் எழுதியவர் வேங்கடாசலபதி. தனது ஆய்வுகளின் வழியாக, வ.உ.சி. புகழை உலகெங்கும் பரப்ப வேண்டும் என்ற தீராத தாகம் கொண்ட அவர், தனது ஆய்வு நூலுக்காக பெற்றிருக்கும் இந்த விருதின் மூலம் வ.உ.சி.யின் வரலாறு மேலும் பரவலாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவருடைய 40 ஆண்டுகால ஆய்வுப் பணிக்கு இந்த விருது மதிப்பு சேர்த்துள்ளது. எடுத்துக் கொண்ட பணியை மென்மேலும் அவர் ஊக்கத்தோடு முன்னெடுக்க வேண்டும் என சிபிஎம் மாநில செயற்குழுவின் சார்பில் வாழ்த்து கிறோம்” எனவும் கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.