அரசு பேருந்துகளில் முன்பதிவு 90 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகளில் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் 12 மணி முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் www.tnstc.in என்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பேருந்து டிக்கெட்களை முன்பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.